  
                நாவல் மரத்தில் நல்ல பலன் கிடைக்கிறது  
  
    சி  .ஐ.ஜெயக்குமார், 
      கொடைரோடு  
      மெட்டூர்  ,  
      தொடர்பு எண் :  98659 25193.  | 
   
 
கொடைரோடு மெட்டூரை சேர்ந்த விவசாயி சி  .ஐ.ஜெயக்குமார் ஒரு ஏக்கருக்கு நாவல்பழ சாகுபடி செய்தார்.   96 மரங்கள் உள்ளன  . சாதாரணமாக நாவல் மரங்கள்   30 முதல் 35 அடி வரை வளரும்  . அவர் ஆண்டுதோறும் கவாத்து செய்வதால்   15 அடி உயரமுள்ள செடிகளாக வளர்ந்துள்ளன  . இயற்கை முறையில் உரமிடுகிறார். அசோஸ்பைரில்லம்  , ரைசோபியம், சூடோமோனாஸ், மாட்டு  எலும்பு சாம்பல், பஞ்சகாவ்யம் போன்ற இயற்கை நுண்ணூட்ட சத்துகளை  பயன்படுத்துகிறார்  . நோய் தாக்குதலை தவிர்க்க இஞ்சிச்சாறு, மஞ்சள்  பொடியை பயன்படுத்துகிறார்  .   நான்கு ஆண்டுகளில் இருந்து பழம் காய்க்கின்றன  . ஒரு  மரத்தில்   60  கிலோ வீதம் ஏக்கருக்கு 5.5 டன்  கிடைக்கிறது  . சாதாரணமாக ஒரு ஏக்கரில்   2 டன் மட்டுமே மகசூல் கிடைக்கும்  . பழம்   5 கிராம் மட்டுமே இருக்கும்  . பறிக்கும்போதே பாதி பழங்கள் சேதமாகிவிடும்  . இங்கு  ஒரு பழம்   17  முதல் 20 கிராம் இருக்கிறது  . உயரம் குறைவாக இருப்பதால் பழங்களை சேதமின்றி பறிக்கின்றனர்  .   விவசாயி கூறியதாவது  : ராஜமுந்திரியில் "ஜம்பு  ' ரக  நாவலை வாங்கி வந்து பயிரிட்டேன்  . ஒரு லட்சம் ரூபாய் மட்டுமே செலவானது. ஒவ்வொரு மரமும்   22க்கு  22 அடி  இடைவெளி உள்ளது  . அதிக தண்ணீர் தேவை   யில்லை  .   15 நாட்களுக்கு ஒருமுறை பாய்ச்சுவேன்  . மே முதல் ஜூலை வரை பழங்களை பறிக்கிறோம்.    நாவல் மரத்தை பொறுத்தவரை ஒரு ஆண்டு நல்ல விளைச்சலும், அடுத்து  ஆண்டு அதில் பாதி மட்டுமே கிடைக்கும்  . ஒரு கிலோ ரூ.  150 க்கு விற்கிறோம்  . சென்னை பசுமை அங்காடிகளுக்கு அனுப்புகிறேன். எங்கள் பண்ணையில் "நாவல் ஜூஸ்  ' தயாரிக்கிறோம்  .   700 மி  .லி.  , ஜூஸ்  பாட்டிலை ரூ  .  170 க்கு விற்கிறோம்  . ஆண்டிற்கு குறைந்தது ரூ.  5 லட்சம்  வரை லாபம் கிடைக்கும், என்றார்   
 |